Sunday 2 May, 2010

ஆப்பீசர், நொதுமலாளரா?




தனது பதிவில் ஆப்பீசர் ஒருமுறை, "முன்னாள் மற்றும் இன்னாள் நண்பர்கள், நொதுமலாளர்கள், மூத்த, நடுத்தர, இளைய பதிவர்கள் அனைவரையும் அழைக்கிறேன். சரியா?" என்று பதிவிட்டிருந்தார்.

அதில், நொதுமலாளர் என்ற வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் புரியவில்லை.சரி, ஆப்பீசர், தமிழ் கற்றறிந்தவர், நன்குணர்ந்தவர், எதோ சொல்லி இருக்கிறார் என நினைத்துக்கொண்டே அதன் பொருள் என்னவென்று யோசித்தேன். ''அறிமுகமில்லாதோர்'' என்ற பொருள் என் மனதில் தோன்றியது.

பொதுவாக, மொழியறிவு என்பது, நமது சுய ஆர்வம் + கற்றறிதல் + கற்பித்தல் + மேன்மை கொள்ளும் ஆர்வம் ஆகியவை அடங்கியது. இதில், கற்பித்தல் என்பது சொல்லிக்கொடுக்கும் ஆசிரியனின் திறமை.

எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் (பள்ளிப் பருவம் தொட்டு, இன்று வரை) எல்லோரும் தகுதி வாய்ந்தவர்கள். அதனால் தான் இன்று, ஏதோ எனக்கு தமிழின் மேல் கொஞ்சமேனும் ஆர்வம் இருக்கின்றது.

சரி, '' நொதுமலாளர்'' என்பதன் பொருள் என்ன?
எனக்குத் தோன்றியது ஒன்றாக இருந்தாலும், உண்மைப் பொருள் என்ன?

அறிய முற்படுகையில்,
அகராதி தேடினேன்.
அதில் ''
umpire'' என்ற வார்த்தை கண்டேன்.
http://www.agaraadhi.com/)

பிறிதொரு தளத்தில்,
''
அயலவர் பெயர் நொதுமலாளர், வம்பலர்'' என்று கண்டேன். இருவேறு பொருள்கள் கண்டபின், வேறு யாதும் பொருள் உளதோ என அறிய முற்படுகையில்,
புறநானூற்றில் ஒரு பாடல் கண்டேன். ''நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது, பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, குடி புறந்தருகுவைஆயின், நின் அடி புறந்தருகுவர், அடங்காதோரே.'' (புறநானூறு - 35)

இதன்
பொருளாக, ''சிலர் கூறும் பொது மொழியை நெஞ்சில் கொள்ளாமல் உழவர் குடியைப் பாதுகாத்து, அக்காவலால் மற்றக் குடிகளையும் பாதுகாப்பாயானால், உன் பகைவர் உன்னடி போற்றுவர்," எனக்கூறியுள்ளனர்.

முடிவில்
, எனக்குப் பெரும் குழப்பமே ஏற்பட்டது. - தமிழால் அல்ல. அதன் பொருளை புரிந்து கொள்ளாததால்.

இனி, தமிழ் கற்றுணர்ந்த ஆப்பீசரே பொருளை விளக்கட்டும்.


2 comments:

  1. காத்திருக்கிறேன் நண்பரே..

    ReplyDelete
  2. நிகழ்காலத்தில்,
    நன்றி. காத்திருப்போம்.

    ReplyDelete