Tuesday 11 May, 2010

விருந்தினர் போற்றுதும்


நல்ல வாய்ப்பு.
அருமையான இடம்.நல்ல மனிதரின் அழைப்பு.

இவை யாவும் தவறிப் போய் விடுமோ என்ற அச்சம் மனதில் அதிகமாகிக்கொண்டே இருந்தது. காரணம், நம் ஆப்பீசரின் ''ஊட்டிக்கு வாங்க'' என்ற அன்பான ழைப்பு. செல்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. செல்லும் நேரம் நெருங்க நெருங்க, இங்கே பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே இருந்தது.

ஒரு வழியாக எல்லா ஆணியையும் பிடுங்கி விட்டு, பலத்த மழையினூடேஊட்டிக்கு சென்று சே
ரும் போது மணி பத்து.

ஆப்பீசரையும், இன்ன பிற பதிவர்களையும் பார்க்கும் ஆவலில் தங்குமிடம்நுழைந்தால், ஆப்பீசர் பலமாக வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். அத்தனையும் உபயோகமான தகவல்கள். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் ரொம்ப பயனுள்ளது . (உதாரணம் - முட்டையிட்டுபாலூட்டும் விலங்கு ...)

ஆனால் நான் சென்று சேரும் முன்பே பல தகவல் பக்கங்கள் புரட்டப்பட்டிருந்தன
.
ஆப்பீசருடன் இருந்தால், நேரங்கள் மிக சுவையாகக் கழியும் என்பதற்கு ஒருஎடுத்துக்காட்டு...


இரவு நேரம்... யாரென்றே தெரியாத ''ஒருவர்'' நட்ட நாடு ராத்திரியில் குளிர் காய்ந்துகொண்டு இருந்தார் என ஆப்பீசர் சொன்னது. இது வரைக்கும் அது யாரென்றேதெரியவில்லை. பேயாக இருக்குமோ என்ற பயமுறுத்தல் வேறு.
காலையில் நாங்களெல்லாம் சாப்பிட்டு முடிக்கும் வரை குளிர் இருந்தது.

அவலாஞ்சி பயணம் மிக அற்புதமாக இருந்தது. வனங்களின் '' தோற்ற மாற்றம்'' பற்றி ஒவ்வொரு டத்தையும் சுட்டிக்காட்டி கொஞ்சமும் போரடிக்காமல் விளக்கியது சுவையாக இருந்தது.
ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கு
ம் திறமைகளை வெளிக்கொணரும்

அவரின்
பா
ங்கேனி.
''க்கிடிகேட்'' என்ற இடம். (நன்றி - ஆப்பீசரின் நிமோனிக்ஸ்) வாழ்க்கையில் பார்க்க வேண்டிய, ஆனால் எல்லோராலும் பார்க்க இயலாதஇடம். ஆப்பீசர் சிறப்பு அனுமதியின் பேரில் அழைத்துக்கொண்டு சென்றதன்மூலம் வாழ்வின் மிகச் சிறப்பான, சந்தோசமான தருணங்களை ணரவைத்தது.

உணவுக்குப் பின் இளைப்பாறல் காரணமாக நடந்த சிறு போட்டியில், ஆப்பீசர்சந்தோசமாக ''ஆணி பிடுங்கினார்" (அதை போட்டோ எடுக்க தவறி விட்டேன்)

சுருக்
கமாகச் சொன்னால், அனைவரையும் அழைத்துச் சென்று மகிழ்வித்து, தானும் மகிழ்ந்து ... இத்தகைய மனம் எல்லோருக்கும் வந்து விடாது.

எல்லாவற்றிற்கும் மேலாக, திருமதி ஆப்பீசரின் மேற்பார்வையில் தயாரானஉணவு ... மிகச் சுவையானது, அன்பும் கலந்திருந்தது.

கொஞ்சமும் பந்தா இல்லாமல் பழகிய ஆப்பீசரின் புதல்வன் பாலாஜியின்குணம் ... கோடி பெறும்.

தமிழ்மணம் காசி சார், வேங்கடசுப்ரமணியம், அய்யா சீனா அவர்கள், திருப்பூர்சிவா இவர்களுடனான சந்திப்புக்கு வழி செய்து தந்த ஆப்பீசருக்கு சிறப்பு நன்றி.

திருமதி சீனா அவர்களின் மனதை நெகிழ வைக்கும் அனுபவம் ... இன்னும்உள்மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

இனிமேல் சுற்றுலா என்று எங்காவது சென்றால், அது ஆப்பீசர் கூடத்தான்இருக்க வேண்டும். ஆப்பீசரின் பார்த்துப் பார்த்து உபசரிக்கும் விதம், ''விருந்தினர் போற்றுதும், விருந்தினர் போற்றுதும்'' என்பதற்கான இலக்கணம் கொண்டது என்பதைசஞ்சய் ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் அன்றுதான் நேரில் அனுபவித்தேன்'' அனுபவித் ''தேன்''

ஆப்பீசர்
, மறுபடியும் எப்போ அழைப்பீங்க? ''

லிங்க் :

வந்தாங்க! வந்தாங்க! ஊட்டிக்கு வந்தாங்க!

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையம்.


அவலாஞ்சி - பயண அனுபவம்.

ஊட்டி மலையில் உறவு

Monday 10 May, 2010

மீண்டு வா சகோதரி


சகோதரி கிருபாநந்தினி நல்லபடி குணமடைய பிரார்த்திப்போம். அவரின் எழுத்துக்களை நாம் மீண்டும் படிக்க வேண்டும்.


மேலதிக விபரங்களுக்கு....

Sunday 2 May, 2010

ஆப்பீசர், நொதுமலாளரா?




தனது பதிவில் ஆப்பீசர் ஒருமுறை, "முன்னாள் மற்றும் இன்னாள் நண்பர்கள், நொதுமலாளர்கள், மூத்த, நடுத்தர, இளைய பதிவர்கள் அனைவரையும் அழைக்கிறேன். சரியா?" என்று பதிவிட்டிருந்தார்.

அதில், நொதுமலாளர் என்ற வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் புரியவில்லை.சரி, ஆப்பீசர், தமிழ் கற்றறிந்தவர், நன்குணர்ந்தவர், எதோ சொல்லி இருக்கிறார் என நினைத்துக்கொண்டே அதன் பொருள் என்னவென்று யோசித்தேன். ''அறிமுகமில்லாதோர்'' என்ற பொருள் என் மனதில் தோன்றியது.

பொதுவாக, மொழியறிவு என்பது, நமது சுய ஆர்வம் + கற்றறிதல் + கற்பித்தல் + மேன்மை கொள்ளும் ஆர்வம் ஆகியவை அடங்கியது. இதில், கற்பித்தல் என்பது சொல்லிக்கொடுக்கும் ஆசிரியனின் திறமை.

எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் (பள்ளிப் பருவம் தொட்டு, இன்று வரை) எல்லோரும் தகுதி வாய்ந்தவர்கள். அதனால் தான் இன்று, ஏதோ எனக்கு தமிழின் மேல் கொஞ்சமேனும் ஆர்வம் இருக்கின்றது.

சரி, '' நொதுமலாளர்'' என்பதன் பொருள் என்ன?
எனக்குத் தோன்றியது ஒன்றாக இருந்தாலும், உண்மைப் பொருள் என்ன?

அறிய முற்படுகையில்,
அகராதி தேடினேன்.
அதில் ''
umpire'' என்ற வார்த்தை கண்டேன்.
http://www.agaraadhi.com/)

பிறிதொரு தளத்தில்,
''
அயலவர் பெயர் நொதுமலாளர், வம்பலர்'' என்று கண்டேன். இருவேறு பொருள்கள் கண்டபின், வேறு யாதும் பொருள் உளதோ என அறிய முற்படுகையில்,
புறநானூற்றில் ஒரு பாடல் கண்டேன். ''நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது, பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, குடி புறந்தருகுவைஆயின், நின் அடி புறந்தருகுவர், அடங்காதோரே.'' (புறநானூறு - 35)

இதன்
பொருளாக, ''சிலர் கூறும் பொது மொழியை நெஞ்சில் கொள்ளாமல் உழவர் குடியைப் பாதுகாத்து, அக்காவலால் மற்றக் குடிகளையும் பாதுகாப்பாயானால், உன் பகைவர் உன்னடி போற்றுவர்," எனக்கூறியுள்ளனர்.

முடிவில்
, எனக்குப் பெரும் குழப்பமே ஏற்பட்டது. - தமிழால் அல்ல. அதன் பொருளை புரிந்து கொள்ளாததால்.

இனி, தமிழ் கற்றுணர்ந்த ஆப்பீசரே பொருளை விளக்கட்டும்.