Showing posts with label சைடு நவீனத்துவம். Show all posts
Showing posts with label சைடு நவீனத்துவம். Show all posts

Tuesday, 20 July 2010

வெட்சிப்பூ



வகையில் வெளியேறும் வாயோடு
சுளித்துக் கொண்டிருந்தன
சுமைகள்.

வருந்தி மோதும்
வாதத்தில்
கருத்த சூரியனின் கண்கள்.

பனியோடு பேசும்
கூர்மை மான்களின்
ஒப்பற்ற சிலேடை.

தாவி வரும்
தாளம் தரும்
தணியாத தகிப்பு.

கொம்போடு அலையும்
சூனியங்களின்
பார்வையற்ற நிலைப்பு.

நாப்பத்தி ஒம்போது
நாவுகளின்
நடனப் பிளவு.

கூர்மையற்ற
வெளிச்சங்களோடு
அபாயமாய் அழகு.

புதைந்த வெளிகளில்
புலர்ந்த பன்னீரில் தேம்பும்
இலக்கற்ற விண்ணின் தேம்பல்.

ஆதவனின் நிழல்
கொண்டாடும்
மைய வெறுப்பு.

சுழிய பந்தம் தேடிய
ஒப்பற்ற
கருநிலாக்கள்

பாடிய மௌனம்
பாடா ஓசை
கேளா நீட்சி.

அவையத்து முந்தீர்...

அனைத்தும் நீளின்
கொற்றனின் கூர்நிசி
கொடுவேல் ஆகுமோ?